வீட்டில் 18 சவரன் நகை திருட்டு! திருச்சி அருகே துணிகரம்

திருச்சி டோல்கேட் பகுதியில், வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை,10 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நெ1 டோல்கேட் பகுதியில் உள்ளது, திருவள்ளுவர் அவென்யூ ஓம் சக்தி நகர். இங்கு, பெரியசாமி (60), அவரது மனைவி சுமதி, மகன் செல்வக்குமார், மகள் ரஞ்சனியுடன் வசித்து வருகிறார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, முசிறி வட்டம் புத்தனாம்பட்டி அருகே உள்ள சாத்தனூர் கிராமத்திற்கு, கடந்த 14ம் தேதி குடும்பத்துடன் சென்றுவிட்டு, நேற்று இரவு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து, 18 பவுன் நகை, வெள்ளி காமாட்சி விளக்கு மற்றும் 10 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

பெரியசாமி அளித்த புகாரின் பேரில், கொள்ளிடம்போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!