முதுகுத் தண்டு பாதிக்கப்பட்டோர் நலனுக்காக 1.64 கோடி மதிப்பீட்டில் மறுவாழ்வு மையம் – மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் நலனில் சிறந்து சேவையாற்றியவர்களுக்கான மாநில விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். இந்நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பார்வையற்றோருக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் முதுகுத் தண்டு பாதிக்கப்பட்டோர் நலனுக்காக ஒரு கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு மறுவாழ்வு இல்லத்துக்கான புதிய கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

Translate »
error: Content is protected !!