10 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்..

கோவை உள்ளடக்கிய 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி வால்பாறை தொகுதிகளுக்கு பொது பார்வையாளராக ..எஸ். அதிகாரி சீமான் வியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை வடக்கு தொகுதி சவுரப்பகத், சிங்காநல்லூர், கிணத்துக்கடவு தொகுதிக்கு வினோத் பிரசாத் ஆகியோர் பொது பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தொண்டாமுத்தூரில் கோபால் மீனா, கோவை தெற்கு தொகுதிக்கு ராஜேஷ் சிங் ராணா, கவுண்டம்பாளையம் தொகுதிக்கு ரிஷிகேஷ் மோதல், ஸ்வர சிஷ்த்தா சோமவன்ஷி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் ..எஸ். அதிகாரிகள் ஆவர். கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிகளுக்கு போலீஸ் பார்வையாளராக மன்மோகன் குமார் பாஷல் என்ற .பி.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர் தொகுதிகளுக்கு போலீஸ் பார்வையாளராக .பி.எஸ். அதிகாரி கிரண் கதிர் கல்லாயா நியமிக்கப்பட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!