100 நடைபாதை வியாபாரிகளுக்கு 10 லட்சம் கடன் உதவி – அமைச்சர் நாசர் வழங்கினார்

நடைபாதை வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் ரூ.10 லட்சம் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி சென்னை ஆவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் நாசர், 100 வியாபாரிகளுக்கு தலா ரூ.10,000 வீதம், மொத்தம் ரூ.10 லட்சம் கடன் உதவி மற்றும் அடையாள அட்டைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர், தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் இந்த உதவிகள் வழங்கப்பட்டதாகவும், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!