தமிழகத்தில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் – காணொலி காட்சி மூலம் நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

தமிழகத்தில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் நாளை திறந்து வைக்கிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் ஆகியோர் நேரடியாக பங்கேற்க உள்ளனர்.

இந்த ஆண்டு தமிழகத்திற்கு கூடுதலாக 1,500 எம்பிபிஎஸ் இடங்கள் கிடைக்கவுள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் இடங்களின் மொத்த எண்ணிக்கை 5,250 ஆக உயர்கிறது. இதனால் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மொத்தம் 9,150 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!