மாநிலங்களவையில் அமளி.. 12 எதிர்க்கட்சி எம்.பிக்கள் சஸ்பெண்ட்

மாநிலங்களவையில் வேளாண் சட்டத்தை ரத்து செய்யும் மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவை கூடியதில் இருந்தே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த மழைக்கால கூட்டத்தொடரின் போது அவமரியாதையாக நடந்து கொண்டதாக கூறி 12 எதிர்க்கட்சி எம்.பி.க்களை தற்போதைய குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்து அம்மாநில மாநிலங்களவை தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளார். அந்த வகையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்

இளமாறம் கரீம் (சிபிஎம்), பூலொ தேவி நேதம், ஷ்யா வெம்ரா, ஆர். போரா, ராஜமனி படேல், சையது நசிர் ஹூசைன், அகிலேஷ் பிரசாத் சிங், ( காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ). பினோய் விஸ்வம் (சிபிஐ) தோலா சென் &ஷாந்தா சேத்ரி (திரிணாமூல் காங்கிரஸ்), பிரியங்கா சதுர்வேதி &அனில் தேசாய், (சிவசேனா).

Translate »
error: Content is protected !!