13 வயது சிறுமியிடம் திருமணம் ஆசை காட்டி கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

சென்னை, மதுரவாயலில் 13 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்திச் சென்ற வாலிபரை போக்சோவின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

சென்னை, அண்ணாநகர், பகுதியில் 7ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை காணவில்லை என அவரது தந்தை சென்னை, மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு வாலிபர் சிறுமியை திருமண ஆசை காட்டி கடத்திச் சென்றது தெரியவந்தது. அதனையடுத்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.

அதனைத் தொடர்ந்து சிறுமியை கடத்திச் சென்ற மதுராந்தகத்தைச் சேர்ந்த நவீன் () நவீன்குமார் (வயது 19) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், சிறுமி வசிக்கும் பகுதியில் தங்கியிருந்த நவீன்குமார், சிறுமியிடம் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி செங்கல்பட்டுக்கு கடத்திச்சென்றது தெரியவந்தது. அதனையடுத்து நவீன்குமார் மீது குழந்தைகளுக்கெதிரான வன்கொடுமைத்தடுப்புச் சட்டப்பிரிவான போக்சோ சட்டப்பிரிவின் கீழ் நவீன்குமாரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Translate »
error: Content is protected !!