மும்பையில் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு

ஓமைக்ரான் வகை கொரோனா பரவலைத் தடுக்க மும்பையில் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

மும்பையில் 11 மற்றும் 12ம் தேதி ஆகிய இரு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுக் கூட்டங்கள், பேரணிகள், ஊர்வலங்கள் மற்றும் 4 நபர்களுக்கு மேல் கூட நடத்தக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓமைக்ரான் நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருவதை அடுத்து, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஓமைக்ரான் பாதிப்பு  கண்டறியப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!