முக்கொம்பு மேலணைக்கு 2 லட்சத்து 12 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

திருச்சி முக்கொம்பு மேலணைக்கு 2 லட்சத்து 12 ஆயிரம் கன அடி நீர் வருகிறது. இதில் 72 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றிலும், ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் கொள்ளிடத்திலும் திறந்து விடப்படுகிறது.

1977 ஆம் ஆண்டு காவிரியில் மட்டும் ஒரு லட்சத்து 62 ஆயிரம் கன அடி நீர் சென்றுள்ளது 2005இல் கொள்ளிடத்தில் 2 லட்சத்து 19 ஆயிரம் கன அடி நீரும் காவிரி கொள்ளிடம் இரண்டையும் சேர்த்து முக்கொம்பில் மூன்று லட்சத்து 50 ஆயிரம் கன அடி நீர் சென்றுள்ளது.

திருச்சி முக்கொம்புவை பொறுத்த அளவு அதிகபட்சமாக 4 லட்சத்து 50 ஆயிரம் அடி நீர் வரை செல்லாம் என நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!