அதிகாரிகளுக்கு தெரியாமல் ஆக்கிரமிப்பு நடக்க வாய்ப்பு இல்லை – உயர்நீதிமன்றம்

நீர்நிலைகளை பாதுகாப்பது அரசின் கடமை, அதிகாரிகளுக்கு தெரியாமல் ஆக்கிரமிப்பு நடக்க வாய்ப்பு இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் அயனம்பாக்கத்தில் உள்ள கிராமத்தில் நீர்நிலைகளை ஒட்டிய ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது.…

கடந்த ஆண்டை காட்டிலும் நெல்சாகுபடி 5.62 விழுக்காடு குறைவு

இந்த ஆண்டு பருவமழை வழக்கமான அளவில் பெய்திருக்கும் போதும் கடந்த ஆண்டை காட்டிலும் நெல்சாகுபடி 5.62 விழுக்காடு குறைந்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய வேளாண் அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 406.9 ஹெக்டர் பரப்பளவில் நெல் சாகுபடி…

தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டம் – உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை

தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டம், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்கள் தென் மண்டல கவுன்சிலில் அங்கம் வகிக்கின்றன. இந்த தென் மண்டல கவுன்சிலில் இடம்…

சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் தொடங்கப்படும்

தமிழகத்தில் பாரம்பரிய மருத்துவ முறையின் பெருமையை போற்றும் வகையில் இந்திய மருத்துவ முறைகளுக்கான, சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் தொடங்கப்படும் என்று கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மாநிலத்தில் சித்த மருத்துவம், ஆயுர்வேதா, யுனானி, யோகா, ஹோமியோபதி மற்றும் இயற்கை…

தேசிய சட்ட சேவை ஆணையத்தின் (NALSA) தலைவர் நீதிபதி சந்திரசூட் நியமனம்

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சந்திரசூட்டை தேசிய சட்ட சேவை ஆணையத்தின் (NALSA) தலைவராக ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார். புதுடெல்லி, தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் அடுத்த தலைவராக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சந்திரசூட்டின் பெயரை ஜனாதிபதி திரௌபதி முர்மு பரிந்துரைத்துள்ளார்.…

அசோக் லேலண்ட் பங்கு 6% உயர்வு, காரணம் இதுதான்

அசோக் லேலண்ட் ஐக்கிய அரபு அமீரகத்தில் 1400 பள்ளி பேருந்துகளுக்கான ஆர்டர்களை பெற்றுள்ளது. இந்த ஆர்டரில், 55 இருக்கைகள் கொண்ட ஃபால்கான் பேருந்து, 32 இருக்கைகள் கொண்ட ஓயஸ்டர் பேருந்துகளை தயாரிக்க உள்ளது. இந்த ஒப்பந்தத்துக்குப் பிறகு அசோக் லேலண்ட் பங்கு…

அந்தமான், நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்

அந்தமான் தீவுகளில் இன்று (செப்டம்பர் 2) மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகியுள்ளதாகத் தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் போர்ட் பிளேயருக்கு 108 கிமீ தொலைவில் நிலநடுக்கம்…

நியாயவிலைக் கடைகளில் G-pay, Paytm மூலம் பணம் செலுத்தும் முறை

தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகளில் G-pay, Paytm மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். முதற்கட்டமாக சில நியாயவிலைக் கடைகளில் அறிமுகம் செய்தபின், மாநிலம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படும். மேலும் நியாய விலை கடைகளில் 2 கிலோ, 5…

திருப்பதியில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ரூ.140.7 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பின்னர் தற்போது கூடுதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் உண்டியல் வருமானமும் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 22.8 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில்…

ரசிகர்களுக்கு நன்றி – ‘குக் வித் கோமாளி’ புகழ்

‘குக் வித் கோமாளி’ புகழ் காதலி பென்சியாவை திருமணம் செய்து கொண்டார். பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார் புகழ். இதுகுறித்து கூறிய அவர், ”எங்கள் திருமணத்திற்கு வாழ்த்திய தொலைக்காட்சி, ஊடக நண்பர்கள், உறவினர்கள், நலன்விரும்பிகள்,…

Translate »
error: Content is protected !!