தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம்

தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குசுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால்…

உண்ணாவிரத போராட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி மறுப்பு

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு காரணமாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக செயல்பட்டு வந்த ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு பதில் ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத்தலைவராக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி…

தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது

தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அ.தி.மு.க.வின் உள்கட்சி பிரச்சனை காரணமாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் கூட்டதில் பங்கேற்கவில்லை. ஆனால், ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் கூட்டத்தொடரில் பங்கேற்றனர். சட்டசபையின் முதல் நாள் நடவடிக்கையில்…

ஜெய்ப்பூர் அரண்மனையில் நடிகை ஹன்சிகா மோத்வானி திருமணம்

நடிகை ஹன்சிகா மோத்வானி திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு டிசம்பரில் திருமணம் நடைபெறும் என்றும் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான அரண்மனை ஒன்றில் திருமணம் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் மணமகன் குறித்த…

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையில் சசிகலா, டாக்டர். கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு…

அம்மாபேட்டையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு: வாகன ஓட்டிகள் வேதனை

சேலத்தில் முறையான திட்டமிடுதல் இல்லாமல் ஒரே நேரத்தில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அம்மாபேட்டை பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையான சிரமங்களை சந்தித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். பாதாள சாக்கடை திட்டம் நெடுஞ்சாலைத்துறையில் சாலை விரிவாக்க திட்டம் என…

முக்கொம்பு மேலணைக்கு 2 லட்சத்து 12 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

திருச்சி முக்கொம்பு மேலணைக்கு 2 லட்சத்து 12 ஆயிரம் கன அடி நீர் வருகிறது. இதில் 72 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றிலும், ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் கொள்ளிடத்திலும் திறந்து விடப்படுகிறது. 1977…

சத்தியமூர்த்திபவனில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்வு

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில், சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று நடைபெற்ற வாக்குபதிவில் 662 பேர் வாக்களித்தனர். மொத்தமாக 93 சதவீத வாக்குகள் பதிவானது. வாக்குப் பெட்டிகள் சீலிடப்பட்டு பாதுகாப்பாக டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர்…

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

மதுரை, தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிம்மக்கல் அருகே தென்கரை வைகைக் கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், அணைகள் நிரம்பி…

சாதாரண தொண்டனுக்கு உள்ள உரிமைக்கூட இனி ஓபிஎஸ்சுக்கு கிடையாது

அதிமுகவில் சாதாரண தொண்டனுக்கு உள்ள உரிமைக்கூட இனி ஓபிஎஸ்சுக்கு கிடையாது என்று மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். விழுப்புரம் அதிமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் நேற்று அளித்த பேட்டி: அதிமுகவின் சட்ட திட்டங்களை மாற்றம்…

Translate »
error: Content is protected !!