22 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை அருகே காரில் கடத்த முயன்ற 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். காஞ்சிபுரம் கீழம்பி சந்திப்பு பகுதியில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியே வந்த காரில் போலீசார் சோதனை நடத்தியபோது, கார் சீட்டின் அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட மகேஷ் மற்றும் குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!