24 மணி நேரத்தில் மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்த்தார் அமைச்சர் க.பொன்முடி

திருக்கோவிலூர் தொகுதி கொடுங்கால் கிராம மக்களின் குடிநீர் பிரச்சனையை 24 மணி நேரத்தில் தீர்த்தார். உயர்கல்வித்துறை அமைச்சர் .பொன்முடி.

திருக்கோவிலூர் தொகுதி, முகையூர் ஒன்றியம் , கொடுங்கால் கிராமத்தில் குடிநீர் பிரச்சனையை இருந்து வந்தது. அப்பகுதி மக்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான .பொன்முடி எம்.எல். தொலைப்பேசி மூலம் தங்களது குடிநீர் பிரச்சனையை தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் .பொன்முடி மாவட்ட ஆட்சியரிடமும் , சம்பந்தப்பட்டத் துறை அதிகாரிகளிடமும் உடனடியாக பேசி ஆழ்துளை மின்மோட்டார் அமைத்து 24 மணி நேரத்தில் தனது தொகுதியைச் சேர்ந்த கொடுங்கால் கிராம மக்களின் குடிநீர் பிரச்சனையை போக்கினார். உடனடியாக குடிநீர் பிரச்சனையை போக்கிய  உயர்கல்வித்துறை அமைச்சர் .பொன்முடிக்கு அப்பகுதி மக்கள் தங்களது நன்றியினைத் தெரிவித்து வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!