டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி

டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறுகையில், 6 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருந்த நிலையில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார், தற்போது 35 கொரோனா நோயாளிகள் மற்றும் 3 சந்தேக நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. (மராட்டியம் – 20, குஜராத் – 4, ராஜஸ்தான் – 9, டெல்லி – 6, ஆந்திரா-1, கர்நாடகா – 3, சண்டிகர் – 1, கேரளா – 1 )

Translate »
error: Content is protected !!