கடந்த 24 மணி நேரத்தில் 42 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 42 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 34 நபர்களுக்கும், காரைக்காலில் 3 நபர்களுக்கும், மாஹேவில் 5 நபர்களுக்கும் என மொத்தம் 42 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தற்போது மாநிலத்தில் 461 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் கொரோனா தொற்றால் உயிரிழப்பு ஏதும் இல்லாத காரனத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1852 ஆகவே உள்ளது. மேலும் மாநிலத்தில் இதுவரை 1,25,28 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,27,521 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!