50 கஞ்சா பொட்டலங்கள் சிக்கின ; இருவர் கைது

புழல்,

செங்குன்றம் அடுத்த புள்ளிலைன் புதுநகர் வலம்புரி செல்வ விநாயகர் தெருவில், ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு போலீசார் அந்த வீட்டில் சோதனையிட்டனர்.

அதில், 50 கஞ்சா பொட்டலங்கள் சிக்கின. அவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், சோழவரம் கோமதி அம்மன் நகர் மற்றும் சோத்துப்பெரும்பேடு பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த பிரபாகரன்(29), சரவணன்(23) ஆகியோர் ஆந்திராவில் இருந்து வாங்கி வந்த கஞ்சாவை பதுக்கி வைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்கள் மீது, அம்பத்தூர் மற்றும் சோழவரம் காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி மற்றும் கஞ்சா வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!