ஒடிசாவில் புதிதாக 510 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி.. 6 பேர் உயிரிழப்பு

ஒடிசா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 510 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,20,754 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.இன்று உறுதி செய்யப்பட்ட 510 பேரில், 79 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். நோய் தொற்றை கண்டறிய 62,509 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

Translate »
error: Content is protected !!