கள்ள நோட்டு தயாரித்த 6 பேர் கைது!

கள்ள நோட்டு தயாரிப்பில் ஈடுபட்டதாக 6 பேரை பிடித்து குடியாத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஜீவா நகர் பகுதியில் வீட்டில் கள்ள நோட்டுகள் தயாரிப்பதாக போலீசார் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த சாயம் பூசப்பட்ட கட்டு கட்டாக காகிதங்கள் மற்றும் உபகரணங்கள் பறிமுதல் செய்து ரமேஷ், தாமு,சிவலிங்கம், அசோக்குமார், சரவணன்,வேலு ஆகிய 6 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடியிருப்பு பகுதியில் கள்ள நோட்டு தயாரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Translate »
error: Content is protected !!