இலங்கைக்கு கடந்த முயன்ற 600 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

திருச்செந்தூரில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்த முயன்ற 3 லட்ச ரூபாய் மதிப்பிலான 600 கிலோ பீடி இலைகள் கியூ பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்செந்தூர் அடுத்துள்ள அமலிநகர் கடல்வழியாக இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து பணியின் போது இரண்டு பைபர் படகுகளில் பீடி இலைகள் ஏற்றப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரை கண்டதும் சுதாரித்துக்கொண்ட மர்ம நபர்கள் கடல்வழியாக தப்பிச் சென்றனர்.

இதையடுத்து கடற்கரை பகுதியில் இருந்த 16 மூட்டை பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஆலந்தலை பகுதியைச் சேர்ந்த ராஜா, சுஜய், நிசாந்தன் உள்ளிட்ட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!