பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 80 சவரன் கொள்ளை

காஞ்சிபுரத்தில் பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 80 சவரன் தங்க நகை 
மற்றும் 5 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளையடித்த நிகழ்வு அதிர்ச்சியை 
ஏற்படுத்தியுள்ளது. மாருதி நகரில் வசிக்கும் ஆடிட்டர் மேகநாதன் என்பரது 
வீட்டில் தான் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. வீட்டில் ஆ்ண்கள் 
யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் முகமூடி அணிந்து திடீரென்று 
வீட்டுக்குள் பெண்களை கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. அதன் 
பின்னர் அவர்களின் கை கால்களை கட்டிப்போட்ட கொள்ளையர்கள், 
பெண்கள் அணிந்திருந்த நகைகள் மற்றும் பீரோவில் வைத்திருந்த நகைகள் 
என மொத்தம் 80 சவரன் நகைகளை அள்ளி சென்றுள்ளனர். இதுகுறித்து
 தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை 
மேற்கொண்டனர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படையும் 
அமைக்கப்பட்டுள்ளது
Translate »
error: Content is protected !!