மாற்றுத்திறனாளிகள் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

மாற்றுத்திறனாளிகள் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறினர்.

ராமநாதபுரம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தெலுங்கானா, புதுச்சேரி போன்று தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ 3000 / – ஆக உயர்த்தி வழங்க வேண்டும், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ 5000 / –மாக தமிழக அரசு உயர்த்தி வழங்கிட வேண்டும்.

தனியார் துறை பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நலச் சங்கம் சார்பாக சுமார் 50 க்கும் மேற்பட்டோர் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்திற்குள் குடியேறும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!