பெரியகுளத்தில் கட்சி நிர்வாகிகளுடன் காவல்துறை… தேர்தல் விதிமுறை ஆலோசனை கூட்டம்

பெரியகுளத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் விதிமுறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை  தனியார் மண்டபத்தில்  நடைபெற இருக்கின்ற 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசியல் கட்சிகள் எந்தெந்த இடத்தில் தேர்தல் பரப்புரை கூட்டம் நடத்துவது.

கூட்டத்தில் என்னென்ன விதிமுறைகளை கடைபிடிப்பது எவ்வாறு நடந்து கொள்வது போன்ற ஆலோசனை  கூட்டம் நடை பெற்றது இந்த கூட்டத்திற்கு பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார்  தலைமையில் நடைபெற்றது 

நடை பெற்ற இந்த கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் .அதிமுக. கம்யூனிஸ்ட் கட்சிகள். இஸ்லாமிய கூட்டமைப்பு. விடுதலைச் சிறுத்தைகள் .பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட கட்சிகளின் பிரமுகர்கள் நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள் மேலும் பெரியகுளம் காவல் நிலையம்  ஆய்வாளர் செந்தில்குமார் தென்கரைகாவல் நிலைய ஆய்வாளர் சுகுமாரன் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் காவல் துறையினர் கலந்து கொண்டனர்

 

 

Translate »
error: Content is protected !!