ஓபிஎஸ் தூண்டுதல்…. பொய் வழக்கில் பந்தல் ராஜா… விடுதலை செய்ய கோரி சாலை மறியல் போராட்டம்

ஓபிஎஸ் தூண்டுதலின் பேரில் பொய் வழக்குகள் போட்டு காவல்துறை கைது செய்த பந்தல் ராஜாவை  விடுதலை செய்ய கோரி வேளாளர் சமுதாயத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம்.

வேளாளர் சமுதாயத்தின் பெயரை மாற்று சமுதாயத்திற்கு தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய வழங்கியது முதலே வேளாளர் சமுதாயத்தினர் பல்வேறு எதிர்புகளை தெரிவித்து போரட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் தற்பொழுது தேர்தல் நடதை விதி அமலுக்கு உள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் வேளாளர் சமுதாய முன்னேற்ற கழக மாநில இளைஞரணி செயலாளர் பந்தல் ராஜாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதனை கண்டித்து வேளாளர் சமுதாயத்தினர்  பெரியகுளம் அருகே சில்வார்பட்டி பகுதியில்  தேனி திண்டுக்கல் சாலையில்  சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் ஓபிஎஸ் தொகுதியான போடி தொகுதியில்  அதிமுக  எதிராக தேர்தலில் வேளாளர் சமுதாயத்தினர் வேட்பாளராக நிற்க ஏற்பாடு செய்யபட்ட நிலையில் ஓபிஎஸ் அவர்களின் தூண்டுதலின் பெயரில் காவல்துறையினர் பந்தல் ராஜா மீது பொய் வழக்குகளை போட்டு சென்னையில் கைது செய்துள்ளதாக கூறி மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் இடுபட்ட வேளாளர் சமுதாய மக்கள் ஓபிஎஸ்க்கும் ஈபிஎஸ்க்கும் எதிராக கோஷமிட்டனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த தேவதானபட்டி காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதன் பேரில் சாலை மறியலை கைவிட்டு சென்றனர். இந்த சாலை மறியலால் 30 நிமிடத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Translate »
error: Content is protected !!