திருவாடனை சட்டமன்ற தொகுதி… தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் முதல் ஆளாக வேட்புமனு தாக்கல்

திருவாடனை சட்டமன்ற தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் முதல் ஆளாக வேட்புமனு தாக்கல்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றைய தினம் துவங்கி வருகின்ற 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம், திருவாடானை, முதுகுளத்தூர், பரமக்குடி தனித் தொகுதி என 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இந் நிலையில் இன்று திருவாடனை சட்டமன்ற தொகுதிக்கு முதல் ஆளாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான அன்பு பக்ருதீன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு முன்னதாக இவர் 2011 ஆம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கமிஷன் தேர்தலில் அங்கீகாரம் பெற்ற சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டவர்.

2016ஆம் ஆண்டு கவுன்சிலராக பதவி வகித்துள்ளார் மேலும் சட்ட பேரவை தேர்தலிலும் போட்டியிட உள்ளார். இரண்டாவது முறையாக திருவாடானை தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பாக திருவாடானை தொகுதியில் போட்டியிடுகிறார்.

Translate »
error: Content is protected !!