ஓபிஎஸ் பெரியகுளத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் வேட்பு மனுவினை வைத்து சிறப்பு பூஜைகள்

போடிநாயக்கனூரில் அதிமுக சார்பில் தமிழக துணை முதலமைச்சர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக பெரியகுளத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் வேட்புமனுவினை வைத்து சிறப்பு பூஜைகள்..

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தேர்தலில் அஇஅதிமுக சார்பில் தமிழக துணை முதலமைச்சர் .பன்னீர்செல்வம் போட்டியிட தேர்வு செய்யப்பட்டார்.

அவர் இன்று தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய பெரியகுளத்தில் இருந்து கிளம்புவதற்கு முன்பாக தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மலைமேல் கைலாசநாதர் கோவில் சென்று அங்கு வேட்புமனுவினை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம்

இதில் சிறப்பு பூஜையின் போது அவருடன் அவரது மகனும் தேனி பாராளுமன்ற உறுப்பினருமான .பி.ரவீந்திரநாத் ஒன்றிய செயலாளர் அண்ணன் பிரகாஷ் தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சிவக்குமார் பெரியகுளம் கூட்டுறவு தலைவர் அன்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் பெரியகுளம் நகர இணைச் செயலாளர் அப்துல் சமது மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!