பெரியகுளத்தில் அதிமுக வேட்பாளர் முருகன் வேட்பு மனு தாக்கல்

பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதி அதிமுக வேட்பாளர் முருகன் தனது ஆதரவாளர்களுடன் வந்து பெரியகுளம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சினேகா அவரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த 12-ம் தேதி முதல் வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்று வரும் நிலையில் பெரியகுளம் சட்டமன்ற தனித் தொகுதியில் கடந்த 12ம் தேதி யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் அதிமுக சார்பில் அதிமுக வேட்பாளர் முருகன் தனது ஆதரவாளர்களுடன் வந்து பெரியகுளம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சினேகா அவரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தை நல்லாட்சி செய்து வரும் அதிமுக அரசு மீண்டும் தொடர மக்கள் விரும்பி உள்ளதாகவும் பெரியகுளத்தில் நீண்ட நாள் கோரிக்கையான மாம்பழ கூழ் தொழிற்சாலை உருவாக்கிட தன் முழு முயற்சி எடுப்பேன் என்றும் சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளை கிராமந்தோறும் செய்து முடிப்பேன் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார்.

 

Translate »
error: Content is protected !!