கோவையில் சிறுமுகை வனப்பகுதியில் சுமார் 3 வயது மதிக்கத்தக்க பெண் யானை சடலமாக கண்டெடுப்பு..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை வனப்பகுதியில் சுமார் 3 வயது மதிக்கத்தக்க பெண் யானை சடலமாக கண்டெடுப்பு.

நேற்று (14/04/2021), மாலை 5.30 மணியளவில், உளியூர் பீட் (நீலகிரி கிழக்கு சரிவு காப்புக் காடு), பெத்திகுட்டை பிரிவு, சிறுமுகை சரக வரம்பில் உள்ள சோளமாதேவி சராகப் பகுதியில் பீட் வனக்காப்பாளர், வனக்காவலர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்களுடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது

சுமார் 3 வயது பெண் குட்டி யானை இறந்து இருப்பதை கண்டறியப்பட்டது. அதன் உடலில் எந்த காயங்களும் இல்லைபிரேத பரிசோதனை இன்று (15.4.21) ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பிரேத பரிசோதனைக்குப் பின்னர் இறப்புக்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தகவல்..

Translate »
error: Content is protected !!