நிலுவை தொகை வழங்ககோரி பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட அரசு ஒப்பந்தகாரர்கள்..!

நிலுவை தொகை வழங்ககோரி பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட அரசு ஒப்பந்தகாரர்கள்.

தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேற கிராம பகுதிகளில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் அரசு ஒப்பந்ததாரர்களால். தடுப்பு சுவர்கள்பேவர் பிளாக் கல் பதிப்பது, சாக்கடை நீர் வடிகால் வாய்க்கால் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பாக முடித்த நிலையில்,,

பணிகளுக்காக  தனியார் நிறுவனங்களில் வாங்கிய சிமெண்ட், ஜல்லிஉள்ளிட்ட கட்டுமான பொருட்களை வாங்கிய நிறுவனங்களுக்கு  ஒரு கோடியே 23 லட்சத்தி 68000 ரூபாயயை கடந்த 9 மாதங்களாக வழங்காத நிலையில் இன்று நிலுவை தொகையை வழங்க கோரி அரசு ஒப்பந்ததாரர்கள் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன் அமர்ந்து முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் உரிய நடவடிக்கை எடுத்து பணிகளுக்கான நிலுவை தொகை வழங்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Translate »
error: Content is protected !!