மகனுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கும்போது தந்தை பரிதாபமாக பலி

கோவையில் மகனுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கும்போது தந்தை நீரில் மூழ்கி பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை,

கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள செம்மாண்டம் பாளையம் புதூரைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் (43) நேற்று மாலை தோட்டத்தில் உள்ள கிணற்றில் மகனுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

நீச்சல் செய்து கொண்டிருக்கும் போது திடீரென செந்தில்குமாருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு நீரில் மூழ்கினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மகன் கிணற்றுக்குள் இருந்து சத்தம் போட்டார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று கிணற்றில் குதித்து செந்தில் குமாரைகாப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் செந்தில்குமார் பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் செந்தில்குமார் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் கருமத்தம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Translate »
error: Content is protected !!