திமுக தேர்தல் அறிக்கை… நிறைவேற்றவேண்டியவை என்னென்ன..!

  • திருக்குறளை தேசிய நூலாக்க மத்திய அரசை வற்புறுத்துவோம்.
  • கடும் ஊழல் புகார்களுக்கு ஆளாகி உள்ள அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்.
  • முதல்-அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் தனித்துறை உருவாக்கப்பட்டு ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.
  • அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் குறை கேட்கும் முகாம் நடத்தப்படும்.
  • சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
  • பொங்கல் திருநாள் மாபெரும் பண்பாட்டு திருநாளாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்படும்.
  • சென்னையில் திராவிட இயக்க கோட்டம் அமைக்கப்படும்.
  • கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சொத்து வரி அதிகரிக்கப்படாது.
  • கொரோனா தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்த அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரண தொகையாக ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும்.
  • ஆவின் பால் லிட்டருக்கு ரூ. 3 குறைக்கப்படும்.
  • அனைத்து தரப்பு மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ. 5-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 4-ம் குறைக்கப்படும்.
  • சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 100 மானியம் வழங்கப்படும்.
  • பெரிய மாநகராட்சிகளில் பறக்கும் சாலை திட்டம் செயல்படுத்தப்படும்.
  • மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்.
  • நியாயவிலைக் கடைகளில் மாதம் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக தரப்படும்.
  • உளுந்தம் பருப்பு மீண்டும் வழங்கப்படும்.
  • அனைத்து அரசு வேலை வாய்ப்புகளிலும் பெண்கள் இட ஒதுக்கீடு 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும்.
  • சட்டம்-ஒழுங்கு காக்கும் பணியின் போது உயிரிழக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி வழங்கப்படும்.
  • பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை களைய சைபர் காவல் நிலையங்கள் உருவாக்கப்படும்.
  • குடிசைகளே இல்லாத தமிழகம் உருவாக்க கலைஞர் சிறப்பு வீட்டு வசதி திட்டம் கொண்டுவரப்படும்.
  • நகர் புறங்களில் ஆட்சேபனை இல்லாத இடங்களில் குடியிருப்போருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும்.
  • கிராம நத்தத்தில் உள்ள வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்கப்படும்.
  • சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் லாரிகள் மூலமாக குடிநீர் வழங்குவதற்கு பதிலாக குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்படும்.
  • அனைத்து கிராமங்களுக்கும் தூய்மையான குடிநீர் வழங்கப்படும்.
  • கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • முக்கியமான மலை கோவில்கள் அனைத்திலும் கேபிள் கார் வசதி ஏற்படுத்தப்படும்.
  • கிராமப்புற பூசாரிகளின் ஊதியமும், ஓய்வு ஊதியமும் அதிகரிக்கப்படும்.
  • இந்து ஆலயங்கள் புனரமைப்பு, குடமுழுக்கு பணிகளுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • மசூதி, தேவாலயங்களை சீரமைக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின் மூலம் முறையான பயிற்சி பெற்று 14 ஆண்டுகளாக வேலையின்றி காத்திருக்கும் 205 அர்ச்சகர்களுக்கு உடனடி பணி நியமனம் வழங்கப்படும்.
  • 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உதவித்தொகை ரூ. 1,500 ஆக உயர்த்தப்படும்.
  • 32 லட்சம் ஆதரவற்ற பெண்கள், கைம்பெண்கள், 50 வயதை கடந்த மண மாகாத பெண்கள், மாற்றுத்திறனாளிகள், உழவர் பாதுகாப்பு திட்ட பயனாளிகள், இலங்கை அகதிகள், ஓய்வூதியம் ரூ.1,500 ஆக உயர்த்தப்படும்.
  • ஏழை மக்கள் பசி தீர முதல் கட்டமாக 500 இடங்களில் கலைஞர் உணவகம் அமைக்கப்படும்.
  • நடைபாதைவாசிகளுக்கு இரவு நேர காப்பகங்கள் அமைக்கப்படும்.
  • சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியாளர்களாக பணியமர்த்தி காலமுறை ஊதியம் வழங்கப்படும்.
  • கலைஞர் காப்பீடு திட்டமும், வரும்முன் காப்போம் திட்டமும் மேம்படுத்தப்படும்.
  • தமிழக ஆறுகள் அனைத்தும் மாசு அடையாமல் காக்க தமிழ்நாடு ஆறுகள் பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்படும்.
  • இயற்கை எரிவாயுவால் இயங்கும் புகையில்லா பேருந்துகள் தமிழக மாநகராட்சி பகுதிகளில் இயக்கப்படும்.
  • கொரோனா தொற்று தாக்கி உயிரிழந்த மருத்துவர்கள், அரசு அலுவலர்கள், முன்கள பணியாளர்கள் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.
  • பணிக்காலத்தில் இறக்கும் அரசு ஊழியர், ஆசிரியர் குடும்பத்துக்கு வழங்கப்படும் நிதி 3 லட்சம் ரூபாயிலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்.
  • ஊட்டச்சத்து குறைந்து பிறக்கும் குழந்தைகளுக்கு உணவு கூடை திட்டம் அமல்படுத்தப்படும்.
  • பத்திரிகையாளர் மற்றும் ஊடகத்துறையினர் நலன் காக்க தனி ஆணையம் அமைக்கப்படும். பத்திரிகையாளர், ஊடகத்துறையினர் ஓய்வூதியமும், குடும்ப நிவாரண நிதியும் உயர்த்தப்படும்.
  • சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் வாங்க ரூ.10 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படும்.
  • ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்க ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
  • மகளிருக்கு பேறுகால உதவித்தொகை ரூ.24 ஆயிரமாக உயர்த்தப்படும்.
  • நீட் தேர்வை ரத்து செய்ய தி.மு.க. ஆட்சி அமைந்ததும் முதல் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும்.
  • முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும்.
  • வேலைவாய்ப்பு அலுவலகங்கள் இளைஞர்களின் திறன் பயிற்சி மையங்களாக செயல்படும்.
  • 5 ஆண்டுகளில் 50 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.
  • அரசுத்துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணி இடங்கள் நிரப்பப்படும்.
  • புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
  • தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 விழுக்காடு வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க சட்டம் கொண்டு வரப்படும்.
  • அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் 80 வயதுக்கு மேல் 20 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படுகிறது. அதனை 70 வயதுக்கு மேல் 10 விழுக்காடாகவும், 80 வயதுக்கு மேல் 10 விழுக்காடாகவும் வழங்குவோம்.
  • வேலையில்லா பட்டதாரிகள் குறுந்தொழில் தொடங்க ரூ.20 லட்சம் வரை கடன் வசதி வழங்கப்படும்.
  • அரசு பணி மகளிருக்கு பேறுகால விடுமுறை 12 மாதமாக உயர்த்தப்படும்.
  • சிறப்பு தாய்-சேய் திட்டம் என்ற பெயரால் கருவுற்ற பெண்களுக்கு வீடு தேடி மருத்துவ வசதி வரும்.
  • புதிய தனி நல அமைச்சகம் அமைக்கப்படும்.
  • கனிமங்கள், தாது மணல்கள் ஆகிய தொழில்கள் அனைத்தையும் அரசே எடுத்து நடத்தும்.
  • அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டா வுடன் டேப்லேட் வழங்கப்படும்.
  • கல்வி நிறுவனங்களில் வை-பை வசதி செய்து தரப்படும்.
  • அரசு துறை நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிக பணியில் உள்ள அனைத்து பணியாளர்களும் பணி நிரந்தரம் செய்யப் படுவவர்கள்.
  • போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்.
  • நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  • கரும்புக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு ரூ.4000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  • உழவர் சந்தைகளுக்கு உயிரூட்டப்பட்டு அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
  • நீர்பாசன துறைக்கு மாற்றாக புதிய நீர்வள ஆதாரங்கள் அமைச்சகம் உருவாக்கப்படும்.
  • நீர் மேலாண்மை ஆணையம் அமைந்திட சட்டம் கொண்டு வரப்படும்.
  • முதல்-அமைச்சரின் நேரடி கண்காணிப்பில் ரூ.10 ஆயிரம் கோடியில் பெரிய ஏரி, குளங்கள் பாதுகாப்பு சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும்.
  • ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 200 தடுப்பணைகள் கட்டப்படும்.
  • ஏழை-எளிய சிறு வணிகர்களுக்கு ரூ.15 ஆயிரம் வரை வட்டி இல்லா கடன் வழங்கப்படும்.
  • அ.தி.மு.க. அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள கடன் சுமையை சீர் செய்ய பொருளாதார உயர் மட்ட குழு அமைக்கப்படும்.
  • மீனவ சமுதாயத்தினர் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.
  • அனைவருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும்.
  • ஜெயலலிதாவின் மரணம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை ஆணைய அறிக்கையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • அரசியலமைப்பு சட்டத்தில் பொது பட்டியலில் உள்ள கல்வித்துறையை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளப்படும்.
  • மத்திய அரசு பள்ளிகள் உள்பட தமிழக பள்ளிகள் அனைத்திலும் 8-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக்கிட சட்டம் கொண்டு வரப்படும்.
  • சென்னை நகரை வெள்ளப்பெருக்கில் இருந்து பாதுகாக்க “சென்னை பெருநகர வெள்ள தடுப்பு மேலாண்மை குழு” அமைக்கப்படும்.
  • வேளாண்மை துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
  • வாழை, மஞ்சள், மரவள்ளிகிழக்கு, பருப்பு, மிளகாய், சிறுதானியங்கள், தேயிலை, எண்ணை வித்துகள் ஆகியவற்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும்.
  • இயற்கை வேளாண்மைக்கு என தனி பிரிவு உருவாக்கப்படும்.
  • தமிழ் எழுத்து வரி வடிவம் சிதைக்கப்படுவதை தடுக்க புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும்.
  • இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த உலக நாடுகளை மத்திய அரசு வலியுறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  • இந்தியாவில் வசிக்க விரும்பும் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும்.
  • வெளிநாடுவாழ் தமிழர்களின் நலனை பேணுவதற்கு வெளிநாடு தமிழர்கள் துறை அமைக்கப்படும்.
  • மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டி தரப்படும்.
  • அரசு பள்ளி, கல்லூரி மாணவியருக்கு இலவச நாப்கின் வழங்கப்படும்.
  • பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
  • மத்திய அரசின் இட ஒதுக்கீட்டின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான வருமான உச்சவரம்பு ரூ.25 லட்சமாக உயர்த்திட மத்திய அரசை வலியுறுத்துவோம்.
  • தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வழங்க வற்புறுத்துவோம்.
  • ஆதி திராவிடர், பழங்குடியினருக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.
  • மாற்று திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.
  • மாற்று திறனாளிகளுக்கு கட்டணம் இல்லா பயண சலுகை வழங்கப்படும்.
  • மாற்று திறனாளி மாணவர்களுக்கு 3 சக்கர மோட்டார் வாகனம் வழங்கப்படும்.
  • தமிழகம் முழுவதும் இலவசமாக (நகர பேருந்து) உள்ளூர் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணம் இல்லா பயண வசதி அளிக்கப்படும். தேர்தல் அறிக்கையில் 500 வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.
Translate »
error: Content is protected !!