மாவா,மிராஜ், ஜர்தா விற்பனை செய்த நபர் கைது..!

சென்னை, கொத்தவால்சாவடி பகுதியில் தடையை மீறி மாவா விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஹான்ஸ், மிராஜ், ஜர்தா போன்ற 72 மாவா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை, கொத்தவால்சாவடி, ஆச்சாரப்பன் தெருவில் போலீசார் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பு பணியில் இருந்தனர். அப்போது அங்கு கையில் பையுடன் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகத்தின் பேரில் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.

அப்போது அதற்குள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மாவா பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. அதனையடுத்து அவற்றை பதுக்கிய பிராட்வேயைச் சேர்ந்த பப்லு யாதவ் (21) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஹான்ஸ், மிராஜ், ஜர்தா போன்ற 72 மாவா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின்னர், கைது செய்யப்பட்ட பப்லு யாதவ் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் சார்பில் தெரிவித்தனர்.

Translate »
error: Content is protected !!