கொடுங்கையூரில் 500 கிலோ குட்கா பறிமுதல்.. இருவர் கைது

சென்னை கொடுங்கையூரில் போலீசாரின் வாகன சோதனையில் 500 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். அது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

கொடுங்கையூர் பகுதியில் குட்கா கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்ஐ மங்களதாஸ் தலைமையில், போலீசார் தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, எழில்நகர் பாலம் அருகில் நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த டாடா ஏஸ் வாகனத்தில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

அவற்றை கடத்தி வந்த கொறுக்குப்பேட்டை பட்டேல் நகரைச் சேர்ந்த ஹபீப் (32), அதே பகுதி காந்திநகரைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் (40) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மொத்தம் 10 மூட்டைகளில் 500 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இருவரும் விசாரணைக்குப் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Translate »
error: Content is protected !!