தேனியில் மீன் வாங்க அதிகளவில் குவிந்த மக்கள்

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகேயுள்ள மஞ்சளாறு அணையில் மீன் வாங்க மக்கள் அதிகளவில்  குவிந்துள்ளனர்.

இங்கு மீன்வளத் துறை மூலம் குத்தகை உரிமம் பெற்று அணைப் பகுதியில் மீன்கள் பிடிக்கப்பட்டு கிலோ ரூ 120 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இன்றுஊரடங்கு தளர்வு நிலையில் மக்கள் அதிக அளவில் மீன் வாங்க குவிந்துள்ளனர்.

இங்க வரும் ஏராளமானோர் முககவசம் அணியாமலும் சமூக இடைவெளியின்றி இல்லாமல் இருக்கிறார்கள்.அதுமட்டுமின்றி ஊரடங்கு காலத்திலும் இதைப்போன்று தான் மக்கள் இங்கு வந்து செல்கின்றனர் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்

Translate »
error: Content is protected !!