ஓசூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் தளி அருகே பெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ் (வயது 30). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்

 இவர் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவரது வீட்டிற்கு இனோவா காரில் 4 மர்ம நபர்கள் வந்தனர். அவரது வீட்டின் கதவை தட்டிய அவர்கள் ரியல் எஸ்டேட் தொடர்பாக பேச வேண்டும் என கூறி வெளியே அழைத்தனர்.

கதவை திறந்து கொண்டு வெளியே வந்த லோகேஷிடம் பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து லோகேஷின் மார்பில் சுட்டனர். டும் டும் என்ற துப்பாக்கி சத்தம் கேட்கவே அவரது மனைவி ஜெயந்தி வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்து பார்த்தார்.

அப்போது ரத்த வெள்ளத்தில் லோகேஷ் உயிரிழந்து கிடந்தார். துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள் அவர்கள் வந்த காரில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் தளி போலீசார் டிஎஸ்பி சங்கீதா தலைமையில் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஓசூரை சேர்ந்த பிரபல ரவுடி உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!