கடமலைக்குண்டு பகுதியில் கஞ்சா விற்ற பெண் கைது

கடமலைக்குண்டு பகுதியில் கஞ்சா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கடமலைக்குண்டு,

தேனி மாவட்டத்தில்  கடமலைக்குண்டு போலீசார் நேற்று தங்கம்மாள்புரம் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது தங்கம்மாள்புரம் மயானம் அருகே நின்று கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த கலைச்செல்வன் மனைவி ஈஸ்வரியை (வயது 48) போலீசார் கைது செய்தனர்மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதேேபால் போடி முந்தல் சோதனை சாவடி அருகே சந்தேகப்படும்படி வந்த வாலிபரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த குடையில் 100 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Translate »
error: Content is protected !!