இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 42,766 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 42,766 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடி 7 லட்சம் 95 ஆயிரம் 716 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸுக்கு 4 லட்சம் 55 ஆயிரம் 33 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 45,254 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை 2 கோடி 99 லட்சம் 33 ஆயிரம் 538 ஆக உயர்ந்துள்ளது.

இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 1,206 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு, இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 4 லட்சம் 7 ஆயிரம் 145 ஆக உயர்ந்துள்ளதுஇந்தியாவில் இதுவரை தடுப்பூசி போடப்பட்ட எண்ணிக்கை 37 கோடி 21 லட்சம் 96 ஆயிரம் 268 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!