சசிகலாவிற்கு சொந்தமான 100 கோடி பதிப்பிலான பையனூர் பங்களா முடக்கம்…!

சென்னையை அடுத்த பையனூரில் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா சொத்துக்களை வருமானவரித் துறை முடக்கி நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். அந்த நிலத்தின் மதிப்பு 100 கோடி எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2017-ல், சசிகலா மற்றும் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 157 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தி பினாமி சொத்துக்கள் என வகைப்படுத்தப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்ய வருமான வரித்துறை முடிவு செய்தது.

அதன்படி, சென்னையை அடுத்த பையனூரில் சசிகலாவுக்கு சொந்தமான ரூ .100 கோடி மதிப்புள்ள பங்களா முடக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில், சசிகலா தொடர்பான ரூ .1,600 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பினாமி சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டன.

 

 

Translate »
error: Content is protected !!