இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,263 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 43,263 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 31 லட்சத்து 39 ஆயிரம் 981 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 40,567 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடி 23 லட்சத்து 04 ஆயிரத்து 618 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸுக்கு 3,93,614 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 338 பேர் உயிரிழந்தனர். இதனால் , இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 4 லட்சம் 41 ஆயிரம் 749 ஆக உயர்ந்துள்ளது.

Translate »
error: Content is protected !!