தீ விபத்து: 6 பூக்கடைகள் எரிந்து சாம்பல்

பூ கடைகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள், ஆறு கடைகள் எரிந்து சாம்பலானது.

பரமக்குடியில் மர்ம நபர்கள் வைத்த தீயில் பூக்கடைகள் எரிந்து சாம்பலாயின. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஐந்து முனை பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. உழவர் சந்தை நுழைவாயிலில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் பூக்கடைகள் வைத்துள்ளனர். இந்த கடைகளுக்கு மர்ம நபர்கள் நள்ளிரவு வைத்த தீயில் 6 பூக்கடைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. பரமக்குடி தீயணைப்புத்துறை வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். முருகன், சிங்க ராணி, கார்த்திகேயன் உள்ளிட்ட 6 வியாபாரிகளின் கடைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. இச்சம்பவம் குறித்து பரமக்குடி டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.உழவர் சந்தை நுழைவாயிலில் கடைகள் அமைப்பதில் வியாபாரிகளுக்குள் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக தீ வைத்த சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!