கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றாத கடைக்கு சீல் வைப்பு…

கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் திறக்கப்பட்ட புதிய கடை 2 மணி நேரத்தில் சீல் வைக்கப்பட்டது.

 

விராலிமலை தெப்பக்குளம் பகுதியில் எப். மென்ஸ் பட்ஜெட் என்ற புதிய ரெடிமேட் ஷோரூம் இன்று காலை திறக்கப்பட்டது. திறப்பு விழாவில் முதல் நாள் சலுகையாக 500 மதிப்புள்ள ஒரு சட்டை ரூ 50 ரூபாய்க்கு வழங்கப்படும் என்றும்.. முந்துபவர்களுக்கு முன் உரிமையில் சட்டை வழங்கப்படும் என்று கடை நிர்வாகம் அறிவித்த நிலையில் காலை கடை திறப்புக்கு முன்பாகவே வாடிக்கையாளர்கள் கடைமுன் குவியத் தொடங்கினர். நேரம் ஆக ஆக கூட்டம் அதிகமானது பெரும்பாலான வாடிக்கையாளர்கள் முக கவசம் அணியவில்லை கடை நிர்வாகமும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் வியாபாரத்தை தொடங்கியது இதனால் கொரோனா தொற்று அபாயம் ஏற்படும் சூழல் உருவானது. தகவல் அறிந்து வந்த விராலிமலை வட்டாட்சியர் சரவணன் கடைக்கு சென்று கடையை பூட்டி சீல் வைத்து ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதித்தார்.

Translate »
error: Content is protected !!