தமிழகத்தில் 1.7 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது…

செப்டம்பர் மாதத்தில் மட்டும் 1 கோடியே 7 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இன்று ஒரு நாளில் மட்டும் 16,43,879 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், மேலும் வைத்திருந்த இலக்கை விட கூடுதலாக 1,43,879 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இன்று ஒரே நாளில் 10,85,097 பேருக்கு முதல் தவணைத் தடுப்பூசியும், 5,58,782 பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் போடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை மட்டும், 1 கோடியே 7 லட்சத்து 70 ஆயிரத்து 761 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!