தேசிய சிலம்பம் போட்டி: தங்கம் வென்றார் திருச்செந்தூா் மாணவி

கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் திருச்செந்தூரை சேர்ந்த மாணவி ஒருவர் தங்கம் பதக்கம் வென்றார்.

கோவாவில் தேசிய அளவில் குழந்தைகளுக்கான சிலம்பாட்ட போட்டி  நடைபெற்றது. இந்த போட்டியில் சார்பில் திரளானோர் பங்கேற்றனர். குறிப்பாக தமிழ்நாடு விளையாட்டு கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவா், மாணவிகள் பங்கேற்றனா். விறு விறுப்பாக நடைபெற்ற போட்டியில் திருச்செந்தூா் காஞ்சி ஸ்ரீ சங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி செ.முத்து இசைராதா 17 வயதுக்குள்பட்ட 70 கிலோ எடைப்பிரிவில் சிலம்பாட்டப் போட்டியில் பங்கேற்றார்.

தொடர்ந்து வெற்றி பாதையில் பயணித்த அவர், இறுதி போட்டியிலும் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வென்றாா். இந்த வெற்றியின் மூலம் மாணவி முத்து இசைராதா, பூட்டானில் உலகளவில் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளாா்.

 

Translate »
error: Content is protected !!