70 கடைகளை ஒரு மாதத்திற்குள் அகற்ற கோவில் நிர்வாகம் நோட்டீஸ்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள  70 கடைகளை  அகற்ற கடையின் உரிமையாளர்களுக்கு கோவில் நிர்வாகம்  நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் வீர வசுந்தராயர் மண்டபம் சேதமானது. விபத்தில் அங்கு செயல்பட்டு வந்த 40க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சேதமானது. கடைகளில் ஏற்பட்ட மின் கசிவு விபத்துக்கு காரணம் என்பதால் அங்குள்ள கடைகளை அகற்ற அப்போது கோவில் நிர்வாகம் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியது. அதை எதிர்த்து கடை உரிமையாளர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தனர். வழக்கு விசாரணையில் கடைகள் செயல்பட நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்நிலையில் மதுரை இணை ஆணையர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கோவிலில் உள்ள பூ, பழம், தேங்காய், குங்குமம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை செய்யும்  70 கடைகளை ஒரு மாதத்திற்குள் அகற்ற கோவில் நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

Translate »
error: Content is protected !!