கொரோனாவால் பலியானவர்களின் குடுபத்தாருக்கு மாதம் ரூ.5000 வழங்கப்படும்…

கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் வழங்க, கேரள அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு எங்கு இறந்தாலும், அவர்கள் மாநிலத்தில் குடியேறியவர்களாக இருந்தால், அவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு  மாதம் 5 ஆயிரம் ரூபாய் வீதம் மூன்று ஆண்டுகளுக்கு வழங்க, கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சமூக நலன், நல நிதி அல்லது பிற ஓய்வூதியங்கள் பெறும் நபர்களும், இந்த நிதி உதவி பெற தகுதி உடையவர்கள் என முதலமைச்சர் அலுவலகம் கூறியுள்ளது.

Translate »
error: Content is protected !!