நடிகர் ஆர்யன் கானுக்கு ஜாமீன் மறுப்பு

சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கானுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது

சமீபத்தில் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதை விருந்து நடப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, அதில் கலந்துகொண்ட, நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் ஆர்யன்கான் உள்ளிட்ட 8 பேரை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதற்கிடையே ஆர்யன்கான் உள்ளிட்ட 8 பேரும் தனித்தனியாக ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.அதில் ஆர்யன் கான் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.இவரது மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை வரும் புதன்கிழமைக்கு ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!