4 சக்கர வாகனங்களை திருடிய இருவர் கைது

சென்னையின் பல்வேறு பகுதிகளில் 4 சக்கர வாகனங்களை திருடிச்சென்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அரும்பாக்கத்தை சேர்ந்த நவீன்ராஜ் என்பவர், தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த 4 சக்கர வாகனத்தை காணவில்லை என போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒருவர் நோட்டமிட்டு வாகனத்தை திருடியது தெரிந்தது. இதுபோல் டி.பி சத்திரம், ராஜமங்கலம், தாம்பரம் போன்ற பகுதிகளிலும் வாகனங்கள் திருடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த திருட்டு சம்பவத்தில் அகஸ்டின் எடின் இன்பராஜை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இதேபோல 4 சக்கர வாகனத்தை திருடிக்கொண்டு, கூட்டாளியான தங்கபாண்டியனுடன் இன்பராஜ் சென்றபோது போலீசார் கைது செய்தனர்.

 

Translate »
error: Content is protected !!