நடிகர் ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் வாழ்த்து

67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. அதில், ரஜினிகாந்த் திரைப்படத் துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்றுள்ளார்.

தமிழில் சிவாஜி கணேசன், கே.பாலச்சந்தரை தொடர்ந்து ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் விருது வழங்கப்பட்டது. திரையுலகில் வாழ்நாள் சாதனைக்காக ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில், முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவு,

திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெறும் அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நெஞ்சம்நிறை வாழ்த்துகள்! திரைவானின் சூரியன் ரஜினி அவர்கள், தமிழ்த் திரையுலகை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளைப் பெற வேண்டும்! வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!