மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு சசிகலா இன்று மாலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கோரிப்பாளையம் தேவர் சிலை மற்றும் தெப்பக்குளம் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவிக்க தேர்தல் பிரசார வாகனத்தில் சசிகலா வந்தார். அதில் அதிமுக கொடி கட்டப்பட்டு இருந்தது.

கோரிப்பாளையம் வந்தடைந்த சசிகலாவின் வாகனம் செல்லூர் வழியாக தேவர் சிலைக்கு வந்தது. அங்கு செல்லூர் ராஜு வீடு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!