வாழும் வரை தானம் – இறந்த பிறகும் தானம் : ரசிகர்கள் நெகிழ்ச்சி

நடிகர் புனித் ராஜ்குமார் இறப்பதற்கு முன்பு இம்மண்ணிற்கு செய்த உதவிகள் போதாது என்று அவர் மறைந்த பிறகும் தானம் செய்த காரியம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் எனப்படும் புனித் ராஜ்குமார், மறைந்த முன்னாள் நடிகர் ராஜ்குமாரின் இளைய மகனாவார். பிட்னஸில் ஆர்வம் கொண்ட இவர், பெரும்பாலான நேரங்களை ஜிம்மிலும், உடற்பயிற்சி செய்வதிலுமே கவனம் செலுத்துவார். அப்படி, நேற்று காலை வழக்கம் போல, ஜிம்மில் உடற் பயிற்சி செய்து கொண்டிருந்த புனித் ராஜ்குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் பெங்களூரூவில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

புனித்தின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அனைத்திற்கும் மேலாக தற்போது தனது இரு கண்களையும் அவர் தானம் செய்துள்ளார். அவரின் இரு கண்களும் பெங்களூரூவில் உள்ள நாராயணநேத்ராலயா கண் வங்கியில் சேமிக்கப்பட்டது.

Translate »
error: Content is protected !!