சேலம் மாவட்டம் ஆத்தூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் ஆத்தூர் தம்மம்பட்டி வடக்கு காட்டுக்கோட்டை பகுதியில் வசிப்பவர் ராமசாமி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அந்த பகுதியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் தொந்தரவு செய்த்து குறித்து பள்ளி மாணவி புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ராமசாமி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஆத்தூர் மகளிர் போலீசார் சிறையில் அடைத்தனர்.